எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை..!

கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தற்போது நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதிமுகவினர் பாஜகவினரை இழுப்பதாக அக்கட்சியினர் அதிமுக மீது குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment