மார்ச் 12ம் தேதி ‘காந்தி சந்தேஷ் யாத்திரை’ தொடங்க காங்கிரஸ் முடிவு.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 90ம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியின் 90 வது ஆண்டு நிறைவை ஒட்டி மார்ச் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து ‘காந்தி சந்தேஷ் யாத்திரை’ தொடங்க காங்கிரஸ் கட்சியின் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ராபர்ட் வதேரா, மற்றும் காங்கிரஸ் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் 27 நாள் நடைபெறும் இந்த பாதயாத்திரை  ஒருகட்டமாக, குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள தண்டி வரை நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.