வார்டுகள் மறுவரையறை.. ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்றும் வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகளில் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பாலமலை கிராமத்தில் பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 28 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை மாநில அமைச்சர் திரு. கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்த பின்பு, குழு அமைத்து வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment