TNPSC: குளறுபடிகளை தடுக்க விசாரணைக்குழு அமைக்க உத்தரவு.!

அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டள்ளது.

2015-ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து TNPSC தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்வு தொடர்பாக உண்மை தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து, 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.? முதலமைச்சர் விளக்கம்.!

மேலும், விசாரணைக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.