சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகள் மூடல்..!

இந்நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட உத்தரவு.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி (நாளை) முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் இறைச்சிக் கடிகள் மீன் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.