புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்..!

புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், அன்பார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே,
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் பலரும் இணைவதற்கு ஆட்சித் தலைவர் பணியே அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதுவே பலரையும் இப்பணிக்கு ஈர்க்கும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது.

இப்பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணிகளையே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். உங்களை மாவட்ட அளவில் அரசாங்கமாக மக்கள் உருவகப்படுத்தும் உன்னத நிலையில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து செயல்படவேண்டிய தருணத்தில் இத்தகைய பொறுப்பை நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள்.

நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டிய இனங்களைப் பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன் என சிலவற்றை குறிப்பிட்டுள்ளார். மேலும், மாவட்ட அளவில் பெறக்கூடிய மனுக்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும், அவசியமில்லாமல் மக்கள் மனுக்களுடன் மாநில தலைநகருக்கு படையெடுக்கும் சூழலை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

IRAIYANBU - COLLECTOR

Leave a Comment