ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

188 புதிய ஆம்புலன்சுகளை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது  பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நீரிழிவு, பிசியோதெரபி உட்பட 5 வகை நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து,  நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இதனால், தமிழகத்தில் ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை 1491 ஆக அதிகரித்துள்ளது.