முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களுக்கு பயணம்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.