சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்…

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், தனது மகள் உட்பட 7 முதல் 10 வயது சிறுமிகள் 3  பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 4ஆம் வகுப்பு படிக்கும் அப்பகுதி மாணவன் ஒருவன் , குற்றவாளி கூறியதன் பெயரில், சிறுமிகளிடம் சாக்லேட் தருவதாக கூறி அருகில் உள்ள மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு அந்த நபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சாக்லேட் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.? குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள்.!

ஆனால், அந்த 4ஆம் வகுப்பு மாணவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு தெரிந்த அடையாளங்களை மட்டும் கூறி, அந்த நபரை தனக்கு தெரியாது என்று தெரிவித்து இருந்தான். மாணவன் கூறிய அடையாளங்களை கொண்டு  குற்றவாளியை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சாக்லேட் கொடுத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை பிடிக்க நீலாங்கரை மகளிர் காவல் நிலையம் தரப்பில் இருந்து 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டனர். தொடர் விசாரணை, சிசிடிவி ஆய்வுகளை தொடர்ந்து, அடையாறு பகுதியில் இருந்த யோவான் (எ) ஜான் எனும் 30வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமிகளிடம் வீடியோ மூலம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி யோவான் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நபர் மேலும் சில சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த யோவான், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன உளைச்சலில் இவ்வாறு செய்துவிட்டதாக போலீசார் விசாரணையில் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  யோவான் மீது போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment