ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி சென்னை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

384-வது சென்னை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டர்  ‘பதிவில்,வில், ‘பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!; கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?; ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி சென்னை, பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன தருமமிகு சென்னை!’ என பதிவிட்டுள்ளார்.