செங்கல்பட்டு தடுப்பூசி மையம் – டெண்டர் எடுக்க ஆளில்லை

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ரவிக்குமார் எம்பி எழுதிய கடிதத்துக்கு பதிலளித்து ஹர்ஷ்வர்தன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என்று தெரிவித்துள்ளார். தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை தனியாருக்கு ஏலம் விட மார்ச் 27ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் டெண்டர் காலம் நீடிக்கப்பட்டும் கூட அந்த நிறுவன ஏலத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.