சந்திராயன்-3 விண்கலம் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும்..! இஸ்ரோ இணைஇயக்குநர் எஸ்.வி.சர்மா..!

சந்திராயன்-3 செயற்கைக் கோளை செப்டம்பரில் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ இணைஇயக்குநர் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) சந்திரனில் ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட உள்ள 3-வது விண்கலம் ஆகும். சந்திரயான்-2 போலவே சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி தகவல்களை அனுப்பும் திறனை வெளிப்படுத்தும். இது லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் (SHAR) உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையதிலிருந்து (SDSC) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திராயன்-3 செயற்கைக் கோள் திட்டப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், சந்திராயன்-3 செயற்கைக்கோளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணமாக சந்திராயன் 1 என்ற விண்கலம், அக்டோபர் 22, 2008ம் ஆண்டிலும், இரண்டாவது பயணமாக சந்திராயன் 2 என்ற விண்கலம் 22ம் தேதி ஜூலை 2019ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையதிலிருந்து (SDSC) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.