சபரிமலை சர்ச்சை……..வெடித்த போராட்டம்…….3 மாநில அரசுகள்……..சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுங்கள்….மத்திய அரசு……அவசர கடிதம்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் அனுமத்திப்பதில் போராட்டம் நடைபெற்று வருவதை முன்னிட்டுச் சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கை எடுக்க 3 மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் அனுமத்திப்பதில் போராட்டம் நடைபெற்று வருவதை முன்னிட்டுச் சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கைஎடுக்குமாறு கேரள, தமிழக, கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 15ஆம் நாள், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோவில் மாத பூசைக்காக அக்டோபர் 17அன்று நடைதிறக்கப்டுவதாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்ததையடுத்துப் பல்வேறு பிரிவினர் போராட்டம் அறிவித்துள்ளதாலும் சபரிமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பெண்கள் அமைப்பினரும் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் போராட்டம் அறிவித்துள்ளதையும், அதேசமயத்தில் பெண்களின் கோவில் நுழைவு முயற்சியைத் தடுப்போம் எனப் பல்வேறு இயக்கங்கள் அறிவித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கேரளத்திலும் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஐயப்ப பக்தர்களும், இந்து இயக்கங்களும் கடும் போராட்டம் அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அசம்பாவிதங்கள் நிகழாதபடி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சட்டம் ஒழுங்கைக் காக்கத் தடை உத்தரவு பிறப்பிப்பதுடன் , சமூக ஊடகங்கள், இணையத்தளச் சேவைகள் வழியாகத் சபரிமலை தொடர்பான தவறான தகவல்கள் பரவாமல் இருக்கக் கண்காணிக்குமாறும் 3 மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


DINASUVADU

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

9 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

12 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

13 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

41 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago