நாளை “கேப்டன் மில்லர்” ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.! குட்டி ஸ்டோரி சொல்லும் தனுஷ்.!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடித்துள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம்.  இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

90 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட பீரியாட்டிக் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.  சமீபத்தில், படத்தின்  இரண்டாம் சிங்கிள் வெளியானது.

தற்பொழுது, இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ப்ரீ ரிலீஸ் விழாவில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி செம ஹிட் அடித்த நிலையில், நாளை ட்ரெய்லரும் வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். அது மட்டும் இல்லாமல், நாளை நடைபெறும் இந்த விழாவில் நடிகர் தனுஷ் குட்டி கதை கூறுவார் என்று அவரது ரசிகர்கள் அவளுடன் காத்திருக்கிறார்கள்.

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தல அறிக்கை வெளியீட்டு இருக்கலாம்! நடிகர் ரஞ்சித் கருத்து!

இதற்கிடையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஷ்வரனும் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையவுள்ளனர் என்றும், இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.