உ.பி.யில் பேருந்து தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு.!

Bus Fire: உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 5 பயணிகள் உயிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட தகவலின்படி, பேருந்து மின் கம்பியில் பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

READ MORE – பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது… மல்லிகார்ஜுன கார்கே பேட்டி 

திருமண விழாவை முடித்துக்கொண்டுமௌ மற்றும் காஜிபூரைச் சேர்ந்த பலர் பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 12 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

READ MORE – தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மாட்டோம்..! நாங்கள் முட்டாள் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் திட்டவட்டம்

இதில், தீக்காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

READ MORE – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம்

இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment