கொரோனா பரவல் அதிகப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவு.
மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும் ஆணையிட்டுள்ளது.
உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் ஜிம்கள் & ஸ்பாக்கள் நாளை முதல் மூடப்படும் என்றும் மேற்கு வங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
உணவகங்கள் & பார்களில் 50% மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதுபோன்று மால்கள், திரையரங்குகளில் இரவு 10 மணி வரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. புறநகர் ரயில்கள் நாளை முதல் இரவு 7 மணி வரை 50% பயணிகளுடன் மட்டும் இயக்கப்படும். திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் இல்லை என்றும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், மேற்குவங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்களுக்கு மட்டுமே விமான சேவை என்றும் ஜன.5 முதல் டெல்லி, மும்பையிலிருந்து வரும் விமானங்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…