#BREAKING: இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழ்நாட்டில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.  தமிழகத்தில் அதிகபட்சமாக ராசிபுரத்தில் 9, வால்பாறை, சோலையாறு, தாளவாடியில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment