#BREAKING: அடுத்து 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment