#BREAKING: இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை.. 5 நாட்களுக்கு இவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தகவல்.

வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஜூன் 13, 14, 15ல் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 5 நாட்களுக்கு தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment