#BREAKING : கோவையில் மேலும் ஒரு இடத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

 கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கரூரை தொடர்ந்து தற்போது கோவையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் முத்து பாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையை பூர்விகமாக கொண்ட முத்துபாலன் டாஸ்மாக் தொழில்சங்கத்தில் பொறுப்பில் உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் இவர் கோவையில் இடம் வாங்கி வீடு காட்டியுள்ளார். முத்து பாலன் வீட்டில் உள்ள கோப்புகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, கோவையில் கட்டுமான நிறுவனத்தை நடத்தும் அருண் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய அதிவிரைவு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.