#BREAKING: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியது!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வு 2023 நாடு முழுவதும் தொடங்கியது.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21,86,940 மாணவர்கள் எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக நாடு முழுவதும் 7,240 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று, சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் 16,96,770 மாணவர்கள் எழுதுகின்ற நிலையில், 6,759 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

CBSEEXAM2023

மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21 வரையிலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியங்களுக்கான தேதி நாளை அறிவித்திருந்தது.

CBSEBOARDEXAM2023

தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வு 2023 நாடு முழுவதும் தொடங்கியது. சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளுக்கு, மாணவர்கள் பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையை அணிந்து, அட்மிட் கார்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment