நிலவின் மேற்பரப்பில் சுழலும் லெண்டர் படம்பிடித்த பிரக்யான் ரோவரின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, நிலவில் பாதுகாப்பாக உலா வரும் பிரக்யான் ரோவர், புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், பாதுகாப்பான பாதையை தேடி ரோவர் சுழற்றப்பட்டது. லேண்டர் இமேஜர் கேமரா மூலம் சுழற்சி படம்பிடிக்கப்பட்டது. இது நிலவில், ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக, உல்லாசமாக இருப்பது போன்ற உணர்வை, தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ரோவரில் உள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி, சல்பர் (எஸ்) இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “ரோவரில் உள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) கருவி, ரோவர் இருக்கும் இடத்தில் சல்பர் (எஸ்) மற்றும் பிற சிறிய கூறுகளைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…