#BREAKING: 1000 புதிய பேருந்துகள்! ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் புதிதாக 1,000 பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பேருந்துக்கு தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து மொத்தம் ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 270 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் – 180, சேலம் – 100, கோவை – 120, நெல்லை – 130 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment