ஆழ்துளை கிணறுக்கு அனுமதி தேவையில்லை – புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரியில் ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை என சட்டப்பேரவையில் அறிவிப்பு.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் பின் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று அமைச்சர் நமச்சிவாயம், காவலர்களுக்கு விடுமுறை, பெண் காவலர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை, ராணுவ வீரர்களுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை என சட்டப்பேரவையில் இன்று வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். புதுச்சேரி நிலத்தடி நீர் அதிகார அமைப்பில் கட்டணமில்லாமல் பதிவு செய்து கொண்டால் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பேரவையில் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment