பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெங்களூரில் பரபரப்பு..!

பெங்களூரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உடனடியாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் நாய் படை  விரைந்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment