புதுக்கோட்டையில் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது சிறுவனின் தலையில் தவறுதலாக பாய்ந்த குண்டு..!

புதுக்கோட்டையில் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது சிறுவனின் தலையில் தவறுதலாக பாய்ந்த குண்டு. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதி. 

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

இதனையடுத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது,  புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குண்டு பாய்ந்து காயமடைந்த விவகாரம் குறித்து கீரனூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் புகழேந்திக்கு தேவையான மருத்துவ சிகிச்சை தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.