வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்த ஆலயம்!!!

மியான்மரில் பெருகி வந்த ஆற்று வெள்ளத்தில் புத்த ஆலயம் ஒன்று தகர்ந்து முழுகும் காட்சி தத்துருவமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. மியான்மர் என்ற பெயரில் அழைக்கப்படும் பர்மா நாட்டின் பக்கொக்கு என்ற இடத்தில் புத்த ஆலயம் ஒன்று கம்பீரமாக காட்சி அளித்து வந்தது. ஐய்ஐயார் வட்டி என்ற நதியின் கரையில் இருந்த இந்த ஆலயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நீரில் முழுவதுமாக மூழ்கியது. பக்தர்களின் மனதை பதை பதைக்க வைத்த இந்த காட்சி தத்துருவமாக படம் பிடிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. 

Leave a Comment