கரூர்:நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படாததால் வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அருகே வாங்கல் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 43 பேருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.
அப்போது, “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “சம்பளம் கிடைக்காத தொழிலாளர்களில் சிலருக்கு ஆதார் எண் இல்லாமல் இருப்பதாகவும், ஆதார் எண் இருந்தாலும் வங்கியில் இணைக்கப்படாமல் இருப்பதாலும் அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை” என அவர் தெரிவித்தார். மேலும், “உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் கூறினார்.
இதனையேற்று கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…