ஆளுநரை கண்டித்து பெரியார் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.! இதற்கு எதிர்ப்பாக பாஜகவினர் சாலை மறியல்.!

தமிழக சட்டசபையில் ஆளுநர் நடவடிக்கை எதிர்த்து கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டப்பேரவையில் தமிழக அரசு கொடுத்த உரையில் ஒரு சில வாக்கியங்கள், பல்வேறு தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் தவிர்த்து தனது உரையை ஆற்றினார். பின்னர் இதற்கு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரவே ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

இதற்கு பல அரசியல் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். ஆளுநரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவியின் போஸ்டர்கள் எரிக்கப்பட்டன.

போராட்டம் நடத்தி வரும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை எதிர்த்து பாஜகவினர்  கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுப்படுவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment