பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.

லக்ஷயா சென்  அரையிறுதிக்கு முன்னேற்றம்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இந்திய வீரர் லக்ஷயா சென் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டோசெனை தோற்கடித்தார். ஆண்டர்ஸ் ஆண்டோசெனை  21-16, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் லக்ஷ்யா தோற்கடித்தார். ஆண்டர்ஸை வீழ்த்தியதால் லக்ஷ்யா காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில்,  காலிறுதி போட்டியில் சீனா வீரர்  லு குவாங் சூ வாக் காயம் காரணமாக வெளியேறியதால் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அரையிறுதிக்கு லக்ஷயா சென் முன்னேறினார்.

இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்:

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி த்ரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, 2-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் லீ சோஹி, ஷின் சியுஞ்சன் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தரவரிசையில் 46-வது ஜோடியான திரிசா-காயத்ரி ஜோடி 14-21, 22-20, 21-15 என்ற கணக்கில் லீ மற்றும் ஷின் ஜோடியை வீழ்த்தியது.