டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. இந்த போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று  1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா  அணி வீரர்கள்:

ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.