நீலகிரி மாவட்டம் உதகை மண்டலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவி முப்ஸிபா துனிசா. இவர் நன்மை பயக்கும் புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் அந்த புதிய நுண்ணுயிரிக்கு தமிழிலான்ஸிஸ் என்று தமிழிலேயே பெயர் சூட்டியுள்ளார். இந்த நுண்ணுயிரி செழிப்பான புல்வெளிகளில் காணப்படும் குப்பைகளை மக்கச் செய்து, மண்ணை தரம்வாய்ந்த உரமாக மாற்றும் ஆற்றல் கொண்டதாக செயல்படுகிறது.
அரசு கலை கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகத்தில் 5 வகையான புதிய நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துனிசா, 2018ம் ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது அரசு கல்லூரி அருகே மண்ணுக்கு அடியில் 1 மில்லி மீட்டருக்கும் குறைவாக நுண்ணோக்கியால் மட்டும் பார்க்கக்கூடிய ஒரு மண் பூச்சியை கண்டுபிடித்தார்.
அதனை, தொடர்ந்து இவர் ஆராய்ச்சி செய்த போது, அந்த பூச்சி பயோ நிகோரஸ் என்ற பேர் இனத்தை சேர்ந்த பயோனிசிரஸ் என்ற புதிய வகை பூச்சி என்பது தெரியவந்தது. இதே குடும்பத்தை சேர்ந்த 6 வகையான பூச்சிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது 7வது வகை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சியின் டி.என்.ஏ. மாதிரிகள் ஸ்பெயின் நாட்டில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் கல்கத்தாவில் இருக்கும் சுவலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பின் இது புதிய நுண்ணுயிரி என உறுதிப்படுத்தியுள்ளன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கு, பாக்டிரியா போன்ற கிருமிகள் ஜீரணிக்கமுடியாத காளான் கழிவுகளையும் இப்பூச்சிகள் தின்று ஜீரணித்துவிடும். மண்ணின் தரத்தை பல மடங்கு உயர்த்தக்கூடியவை. இந்த பூச்சிகளுக்கு கண்கள் கிடையாது. மேலும், இந்த பூச்சி விவசாயம் மற்றும் மறுத்து துறையில் எந்தெந்த விதத்தில் எல்லாம் பயன்படும் என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…