டிஎன்பிஎல் தொடரின் இன்றைய NRK vs CSG போட்டியில், நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 14வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதில் அபராஜித் அதிரடியால் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியில் முதலில் அருண் கார்த்திக், நெரஞ்சன் ஜோடி களமிறங்கினர்.
இருவரும் பொறுப்பாக விளையாடிய நிலையில் சிலம்பரசன் வீசிய பந்தில் நெரஞ்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அருண் கார்த்திக் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்களில் களத்தை விட்டு வெளியேறினார்.
பிறகு அருண் கார்த்திக் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என பறக்கவிட்டு டிஎன்பிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதியில் அருண் கார்த்திக் மற்றும் அஜிதேஷ் குருசுவாமி களத்தில் இருக்க, நெல்லை அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
இதனால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 104* ரன்களும், ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்களும், நெரஞ்சன் 24 ரன்களும் குவித்துள்ளனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…