வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

உலக சுகாதார நிறுவனம் :

  • புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின் அளவு சற்று தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது .
  • கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் வெளுத்து வாங்கும் வெயிலால் கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோயாளிகள் மற்றும் வெயிலின் உணர்வு இல்லாத மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • 1998 முதல் 2017 ஆண்டுகளுக்கான கணக்கெடுப்பின்படி வெயிலின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரம் ஆகும். ஆகவே நாம் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

வெளியில் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டியவை :

  • கண்டிப்பான முறையில் தலைக்கு தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். பருத்தி அல்லது லினன்  துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை தான் பயன்படுத்த வேண்டும்.
  • மறக்காமல் தண்ணீர் கொண்டு செல்வது மிக அவசியம்.சூரிய கதிர்விச்சிலிருந்து கண்களை பாதுகாக்க சன் க்ளாஸ் அணிந்து கொள்ளவேண்டும் .செருப்பில்லாமல் நடப்பதை தவிர்க்கவும் .
  • வெளியில் செல்லும்போது குடை எடுத்து செல்ல வேண்டும், அதில் கருப்பு நிற குடைகளை தவிர்ப்பது நல்லது . கருப்பு நிறம் ஆனது வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது இதனை தவிர்த்து வெண்ணிற குடைகள் பயன்படுத்துவது நல்லது.

இரவு நேர வெப்பம்:

  • பகலில் மட்டுமே நாம் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறோம் என நினைக்கிறேன். இரவிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் நாம் தூங்குவதால் நமக்கு தெரிவதில்லை. எனவே இரவு நேரத்தில் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குறிப்பாக நீர்மோர் மற்றும் உப்பு சக்கரை கரைசல் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும்போதும் வெளியில் இருந்து வந்த பிறகும் உப்பு சர்க்கரை கரைசல் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்வது நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக்கொள்ளும்.
  • ஒரு ஈரத் துணியால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளை அடிக்கடி துடைக்க வேண்டும் ,இதனால் வேர்க்குரு மற்றும் சரும பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்ளலாம்.
  • தினமும் 2.5யில்  இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் ஆவது நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பெண்கள் தங்கள் சமையல் வேலைகளை சூரியன் வருவதற்கு முன்பே முடித்து விடுவது நல்லது. ஏனெனில் வெளியில் இருந்து வரும் வெப்பமும் அடுப்பில் இருந்து வரும் வெப்பமும் பெண்களுக்கு உடல் சூட்டை ஏற்படுத்தும்.
  • ஜன்னல் மற்றும் கதவுகளை பகலில் மூடி வைத்துவிட்டு இரவில் திறந்து வைத்தால் அறைகளுக்குள் வெப்ப காற்று வீசாமல் இருக்கும்.

ஆகவே இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் முடிந்தவரை காலை 11 -4 மணி வரை  வெளியில் செல்வதை தவிர்க்கவும்.