விருத்தாசலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…! 3.50 லட்சம் பறிமுதல்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.