பின்லேடனின் தளபதி அல்கொய்தா தலைவருமான ஜவாஹிரி ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார்.!

அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானம் மூலம் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால்,உலக பயங்கரவாதி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் தற்போது, ஒசாமா பின்லேடனின் இரண்டாவது தளபதியும் , தற்போதைய அல்கொய்தா அமைப்பின் தலைவருமான அய்மன் அல்-ஜவாஹிரி இன்று ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த இவரை அமெரிக்க சிஐஏ , ஆளில்லா விமானம் மூலம் கொன்றுவிட்டதாக அமெரிக்க சிஐஏ கூறுகிறது.

இது குறித்து கருத்து கூறிய , ஜோ பிடன், ‘இப்போது நீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தலைவர் இப்போது இல்லை. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் எப்போதும் பின்வாங்கியது இல்லை.’ என குறிப்பிட்டார்.

Leave a Comment