ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் அதிமுக..!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் அன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழக்கமாக வழங்கப்படும். இந்த தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக அறிவித்துள்ளது. ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அம்மாவின் வாசனை! வெளிவராத பவதாரணியின் பாடலை வெளியீட்டு இரங்கல் தெரிவித்த எம்பி கனிமொழி!

இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.