மது ஆர்டர் செய்து ரூ.35,000 பறிகொடுத்த நடிகை.!

  • சமீபத்தில் பிரியா பேனர்ஜி ஆன்லைன் மூலம் மது ஆர்டர் செய்து  உள்ளார்.பின்னர் ஒரு நபரிடம் இருந்து போன் வந்து உள்ளது.
  • அவரிடம் டெபிட் கார்ட் விவரங்களை கூறியதால் பிரியா கணக்கிலிருந்து ரூ.35,000 எடுத்து உள்ளார்.

பிரியா பேனர்ஜி  தமிழில் சித்திரம் பேசுதடி- 2 , தெலுங்கில் கிஸ், ஜோரு, அசுரா போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.  இவர் தற்போது மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் பிரியா பேனர்ஜி ஆன்லைன் மூலம் மது ஆர்டர் செய்து  உள்ளார். பின்னர் ஒரு நபரிடம் இருந்து போன்வந்து உள்ளது. அப்போது பேசிய அவர் மதுக்கு பணம் தர வேண்டும் என்பதால் உங்களின் டெபிட் கார்ட் விவரங்களை சொல்லுங்கள் எனகேட்க , இதையடுத்து தனது டெபிட் கார்ட் விவரங்களை பிரியா பேனர்ஜி கூறியுள்ளார்.

பின்னர் அடுத்த சிறிது நிமிடங்களில் பிரியாவின்  கணக்கிலிருந்து ரூ.22,000 எடுத்து உள்ளனர். இதைப்பார்த்து பிரியா அதிர்ச்சி அடைந்த உள்ளார்.பின்னர் மீண்டும் அதே நபர் போன் செய்து உங்கள் கணக்கில் இருந்து அதிகமாக பணம் எடுத்து உள்ளோம். எனவே உங்கள் கூகுள் பே பார்கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் ரூபாய் திரும்பி விடும் என கூறியுள்ளனர்.

அவர் சொன்ன படி பிரியா செய்ய மீண்டும் தனது கணக்கில் இருந்து மேலும் 12 ஆயிரம் பறிகொடுத்தார்.இதனால் அதிர்ச்சியான பிரியாகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பணம் வேறு கணக்குக்கு மாறுவதை தடுத்து நிறுத்திய  2 மணி நேரத்தில் பணத்தை மீட்டு கொடுத்தனர்.