நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார்.!

பாலிவுட் நடிகயும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவரது மேலாளர் அறிவித்துள்ளார்.

2011 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பிய இவர், 2013ஆம் ஆண்டு வெளியான ‘நாஷா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

பூனம் பாண்டே மரணம் செய்தி குறித்து அவரது இன்ஸ்டா கிராம் பக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தக் காலை எங்களுக்கு கடினமான ஒன்று. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.

லால் சலாம் படத்தில் ஏன் இதை செய்தேன்.? வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

இந்த துயர நேரத்தில், நாங்கள் பகிர்ந்த எல்லாவற்றிலும் அவளை அன்புடன் நினைவுகூரும்போது தனியுரிமையைக் கோருவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

Leave a Comment