நாளை நடக்கிறது நடிகர் சங்கத் தேர்தல் – தபால் வாக்குகள் இன்றுடன் நிறைவு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை ஜூலை 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தபால் மூலம் வரும் வாக்குகளுக்கான நேரம் இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்றது.
பல பிரட்சனைகளுக்கு மத்தியில் நாளைய தினம்  நீதிமன்றம் நடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பஞ்ச பாண்டவர் அணியும் நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களம் இறங்கியுள்ளன.
தொலை தூரத்தில் இருக்கும் நடிகர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்காக தபால் வாக்கு முறை உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பில் இருந்து இந்த தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும். இந்த தபால் வாக்குகள் பெறப்படும் நேரம் இன்று மலை 5 மணி 30 நிமிடங்களுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பல பேர் அனுப்பிய தபால் வாக்குகள் முறையாக வந்து சேரவில்லை என்பது சுவாமி சங்கரதாஸ் அணியினரின் புகாராக உள்ளது.