BREAKING: நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று சென்னை வளசரவாக்கத்தில் காலமானார்.

இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் காலமானார் என்று கூறப்படுகிறது. தற்போது, இவரது மறைவுக்கு திரையுலகம் பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

70 வயதாகும் இவர், ரகு பாலையாவாக தூத்துக்குடி பிறந்து வளர்ந்துள்ளார். இந்நிலையில், இவரது உடல் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகனான ஜூனியர் பாலையா, 1975ம் ஆண்டு “மேல்நாட்டு மருமகள்” நோக்கும் என்ற படத்தில் அறிமுகமானார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முதன்மை துணை வேடங்களில் நடித்து வந்துள்ளார்.

பெரிதினும் பெரிது கேள்…விஜய் சொன்ன குட்டி கதை! அரங்கமே அதிர்ந்த தருணம்

2010 களில், அரிதாகத் நடிக்க தொடங்கிய ‘சாட்டை’ திரைப்படத்தில் தலைமை ஆசிரியராக நடித்ததற்காக புகழ் பெற்ற இவர், பின்னர் 2015களில், கும்கி, தனி ஒருவன், புலி மற்றும் நேர்கொண்ட பார்வை என முக்கிய நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.