3 இடங்களில் அதிரடி சோதனை.! போலீசாரிடம் சிக்கிய 1580 கிலோ செம்மர கட்டைகள்.!

பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 1,580 கிலோ செம்மர சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

பெங்களுருவில் மஹாலக்ஷ்மி லே அவுட் போலீசார், 3 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சோதனையின் முடிவில் 1,580 கிலோ செம்மர சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

ஏற்கனவே பெங்களூரு போலீஸ் கடந்த மாதம் ஒரு கும்பலிடம் 730 கிலோ சந்தனக்கட்டைகள் மற்றும் 147 லிட்டர் சந்தன எண்ணெய் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment