அதிரடி சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டி 12 ஓவ்ர்கள் முடிவில் 97/2

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த முதல் டி-20 போட்டி மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது டி-20 போட்டி மவுண்ட் மவுங்கனுயில் இன்று நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன்(36), ரிஷப் பந்த்(6) ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் உள்ளனர்.

Leave a Comment