ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா..மொத்த பாதிப்பு 4,189ஆக உயர்வு..இது கேரளா ரிப்போர்ட்.!

இன்று கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 4,189-ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,189 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2152 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.