Accident: கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.! இருவர் உயிரிழப்பு, பலர் காயம்.!

உத்தரப்பிரதேசத்தில் பாரபங்கி மாவட்டத்தில் இன்று அதிகாலை இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் 3 முதல் 4 பேர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தகவல் அறிந்து வந்த மீட்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டிடம் விழுந்த சில மணிநேரத்தில் 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.