சினிமா

வடிவேலுக்கு புடிச்சா தான் வாய்ப்பு! ஆர்த்தி போட்டுடைத்த உண்மை!

நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தனக்கு உதவியாக காமெடி காட்சிகளில் நடிக்க வைக்க தனக்கு பிடித்தவர்களை மட்டுமே அழைத்து வாய்ப்பு கொடுப்பதாக பல பிரபலங்கள் வடிவேலுவை பற்றி குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவை பற்றி பேசி இருக்கிறார்.

பேட்டியில் பேசிய நடிகை ஆர்த்தி ” வடிவேலு எவ்வளவு பெரிய சிறந்த நடிகர் என்பதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. உலகத்திற்கே அது தெரியும். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் செய்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், நான் கோவை சரளா அக்கா ஆகியோர் ஒரு படத்தில் நடிக்க இருந்தோம்.

அது மஞ்சு வாரியர் இல்ல! ரொமாண்டிக் போஸ்டரால் பதறிய ரசிகர்கள்!

அந்த படத்திற்காக இயக்குனர் சிம்பு தேவன் எனக்கு அழைப்பு கொடுத்து என்னை கமிட் செய்தார். நானும் அந்த படத்திற்கு தேதி எல்லாம் கொடுத்துவிட்டேன். பிறகு ஒரு முறை எனக்கு கால் வந்து இந்த தேதியை நீங்கள் வேறு படத்திற்கு கொடுங்கள் நமக்கு தேதி மாற்றி விடப்பட்டு இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், அதே தேதியில் அங்கு படப்பிடிப்பு நடந்தது. உடனடியாக நான் தொடர்பு கொண்டு என்ன ஆச்சு படப்பிடிப்பு நடந்திருக்கிறது எதற்காக சார் என்னை அழைக்கவில்லை? என்று கேட்டன்.

அதற்கு வடிவேலு சார் கோவை சரளா மற்றும் ஆர்த்தி ஆகியோரை மக்கள் பல முறை பார்த்துவிட்டார்கள் அவர்கள் வேண்டாம் என்று கூறியதாக சிம்பு தேவன் என்னிடம் தகவலை சொன்னார். இதனை கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எங்களுக்கு பதில் அந்த கதாபத்திரத்திற்கு வேறு ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடந்தது. பிறகு சில மாதங்களில் படம் அப்டியே கைவிடப்பட்டது.

அந்த படம் நின்ற பிறகு 10-ஆண்டுகள் அவர் முகத்தை கூட நாங்கள்பார்க்கவில்லை. எப்போதுமே அவரை நம்பி இருப்பவர்களுக்கு மட்டும் தான் வடிவேலு வாய்ப்பு கொடுப்பார். அதுவும் அவருடைய மனதிற்கு பிடித்தது போல யார் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுப்பார். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது” எனவும் ஆர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

சேலத்தில் பரபரப்பு.! அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை.!

சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில்…

4 mins ago

மீண்டும் சவரன் ரூ.54,000ஐ கடந்த தங்கம் விலை.!

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி…

10 mins ago

ரயில் இன்ஜினில் தொங்கி கொண்டு வந்த முதியவரின் சடலம்.! அதிர்ச்சி வீடியோ…

தெலுங்கானா : காட்கேசரின் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

19 mins ago

தமிழகத்தில் புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்..! செல்வப்பெருந்தகை பாராட்டு

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, சித்தாமூர் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார்.…

26 mins ago

போலி பணி நியமன ஆணை வழங்கி பண மோசடி ! அரசு மருத்துவமனை உதவியாளர் கைது!

தருமபுரி: தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. இவர் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில்…

27 mins ago

டெல்லி வந்திறங்கிய இந்திய அணி…கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட ரோஹித் சர்மா!

டெல்லி : மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், கோப்பையுடன் இந்திய வீரர்கள்…

41 mins ago