இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படத்தை முன்கூட்டியே வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இப்போது, மார்ச் 28ம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை.
இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், கேரளாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளியாக, சவுதி அரேபியாவில் ஒரு ஆட்டு பண்ணையில் அடிமையாக நடிப்பதாக கூறப்படுகிறது.
மிரட்டல் லுக்கில் தனுஷ்! வெளியானது ‘D50’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
கொரோனா காலகட்டத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கடந்த 3 மூன்று மெதுவாக உருவாகி வருகிறது. இதனால், மலையாளப் படங்களில் அதிகம் பேசப்பட்ட படமாக இது பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில், அமலா பால், கோகுல், ஜிம்மி ஜீன்-லூயிஸ், தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
View this post on Instagram