வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இதனால், வட மாநிலங்களான ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தெலங்கானாவின் மஞ்சேரியல், கரீம்நகர், பெத்தப்பள்ளி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முழுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், மகபூப்நகர், நாகர்கர்னூல், வனபர்த்தி, அடிலாபாத், கோமரம் பீம் ஆசிபாபாத், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், பத்ராங், கொம்பத்ஹில்லா, ராஜாண்ணா சிரஸ்தத்தில்லா, ராஜாண்ணா சிரஸ்தம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.