சொந்த ஊரில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்… திடீரென எழுந்து பேசிய முதியவர்.!

இறந்து விடுவார் என அறியப்பட்ட முதியவர் திடீரென உயிர்பிழைத்து பேசிய அதிசயம் புதுக்கோட்ட முரண்பட்டியில் நிகழ்ந்துள்ளது.  

ஒருவர் இறந்துவிடுவார் அல்லது இறந்துவிட்டார் என தவறுதலாக எண்ணி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் திடீரென ஓர் அதிசயம் நிகழ்ந்து அவர்கள் எழுந்து விடுவார்கள். அப்படி ஒரு அதிசயம் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் உடல் நலகுறைவால் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார்.

அப்போது இவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியதன் காரணமாக அவர் இறந்துவிடுவார் என கருதி குடும்பத்தினர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் இறுதி மூச்சிருக்கும் வரை சொந்த ஊரில் இருக்கட்டும் என முரண்டாம்பட்டிஅழைத்து வந்துள்ளனர்.

அவர் ஆம்புலன்சில் வரும் போதே சண்முகம் இறந்து விட்டார். அவரது உடல் தான் அடக்கம் செய்ய எடுத்து வரப்படுவதாக உறவினர்கள் தவறாக எண்ணி வைக்கோல்களை கொளுத்தி இறுதி சடங்குகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அடுத்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சண்முகத்திற்கு அவரது மகன் பால் ஊற்றியுள்ளார். அப்போது சண்முகத்தின் மகன், திடீரென சாமியாடி, தனது தந்தை பிழைத்துக்கொள்வார் என கூறியுள்ளார். இந்த நேரத்தில் தான் சண்முகத்தின் உடல்நிலை சரியாகி அவர் பேசவும் தொடங்கியுள்ளார். இந்த செய்தி அப்பகுதியில் அதிசயமாக பேசப்பட்டு வருகிறது.

 

Leave a Comment