தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

Heavy Rain in Tamilnadu

வடகிழக்கு பருவநிலை மீண்டும் தீவிரமடைய உள்ளதால் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில்,  ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உட்பட 18  மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், … Read more

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்… திடீரென எழுந்து பேசிய முதியவர்.!

இறந்து விடுவார் என அறியப்பட்ட முதியவர் திடீரென உயிர்பிழைத்து பேசிய அதிசயம் புதுக்கோட்ட முரண்பட்டியில் நிகழ்ந்துள்ளது.   ஒருவர் இறந்துவிடுவார் அல்லது இறந்துவிட்டார் என தவறுதலாக எண்ணி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் திடீரென ஓர் அதிசயம் நிகழ்ந்து அவர்கள் எழுந்து விடுவார்கள். அப்படி ஒரு அதிசயம் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் உடல் நலகுறைவால் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். அப்போது இவரின் உடல்நிலை … Read more

ரூ.50 கோடி வரி ஏய்ப்பு? அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை!

அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இபிஎஸ் ஆதரவாளரான பாண்டித்துரை பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை … Read more

#BREAKING: அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமான வரி சோதனை!

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றவர் பாண்டித்துரை. நெடுஞ்சாலை … Read more

கடவுள் முன் அனைவரும் சமம்.! யாருக்கும் முதல் மரியாதை கிடையாது.! உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு.!  

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் … Read more

தகாத உறவு.! தட்டிக்கேட்ட சித்தப்பா கொடூர கொலை.! 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.!

குடும்பத்தில் நடந்த தகாத உறவை தட்டிக்கேட்ட சித்தப்பாவை, அப்பா மற்றும் உறவினருடன் அண்ணன் மகன் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ள்ளது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம்.  2020இல் கொடூரமாக நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் இன்று புதுக்கோட்டை மாவட்ட  முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் கொலை செய்யப்பட்டவரின் அண்ணன், அண்ணன் மகன், உறவினர் ஒருவர் என 3 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,  நாகுடி அருகே … Read more

#BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 24-ஆம் தேதி பணி நாள் என்றும் அன்று பள்ளி, கல்லூரிகள் … Read more

“300 ஆண்டுகள் பாரம்பரியம்;இந்த மன்னருக்கு மணிமண்டபம்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதனால்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில்,புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வர் … Read more

புதுக்கோட்டை : குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அரசு அதிகாரிகள் சீல்வைப்பு…!

புதுக்கோட்டையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.  புதுக்கோட்டை அருகே உள்ள குடுமியான்மலை எனும் பகுதியில் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த காப்பகத்தில் குழந்தைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும், ஆனால் இந்த பணத்தை பெற்றுக்கொண்ட காப்பக உரிமையாளர்கள் குழந்தைகளை முறையாக பராமரிக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த காப்பகத்தை நடத்தி வந்த அரசு பள்ளி ஆசிரியை கலைமகள் மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் … Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!

புதுக்கோட்டை அருகில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, நீதிபதி இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இருக்கும் மூலக்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற 27 வயது இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த இவருடைய அண்ணன் முறை உறவினரின் ஏழு வயது மகளை பாலியல் கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இது … Read more